Wednesday, August 26, 2015

ஒசாமா பின்லேடன் பற்றி வியப்பான விஷயங்கள்

ஒசாமா பின்லேடன் குறித்து நீங்கள் அறிந்திராத சுவாரஸியமான விஷயங்கள் 
ஒசாமா பின்லேடன் என்றால் அவர் இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவீரவாத தாக்குதல் தான் நமது நினைவிற்கு வரும் . இவர் பற்றி நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உண்டு

ஒசாமா ஒரு பணக்கார அரேபிய  குடும்பத்தை சார்ந்தவர் ஆயினும் அவர் போராளி என்பதை சொல்லிகொள்ளவே விரும்பி இருக்கிறார்

அவர் அமெரிக்க தேசத்தை வெறுத்ததை விடவும் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றாத இஸ்லாமியர்களை தான் அதிகம் வெறுத்தாராம்

இவர் ஒரு வாலிபால் பிளேயர் , இவர் நிறைய விளையாட்டுகளிலும் பங்கெடுத்து இருந்திருக்கிறார் அமெரிக்காவை பற்றி அங்குள்ள விளையாட்டான volley ball தவிர மற்ற எல்லாத்தையும் வெறுத்து இருக்கிறார்

ஒசாமாவிற்கு மஹாத்மா காந்தியின் கொள்கைகள் பிடிக்குமாம் , அவர் இது குறித்து ஒரு கேசெட்டில் பேசியும் இருக்கிறார் எப்படி காந்தி அவர்கள் பிரிட்டிஷ் பொருட்களை நிராகரித்தாரோ அதை போல அவர்களும் அமெரிக்க பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்று

ஒசாமாவிற்கு பிரிட்டிஷின் நியூஸ் பிபிசி கேட்பது மிகவும் பிடிக்குமாம் அடிக்கடி ரேடியோ நியூஸ் கேட்பாராம்

இவர் படித்தது Business Administration and Economics மேலும் இவரின் தகப்பனாரின் வியாபாரமான construction businessஐ நடத்தியும் வந்திருக்கிறார்

இவருக்கு தோட்ட கலைகளில் ஆர்வம் மிகுதி தனது பிள்ளைகளை செடிகள் வளர்க்க ஊக்குவிப்பாராம் எவரின் செடி உயரமும் நன்றாகவும் உள்ளதோ அவருக்கு பரிசளிப்பாராம்

இவர் நன்றாய் கவிதை எழுத கூடியவரும் இலக்கிய அறிவு உடையவராய் இருந்திருக்கிறார் மேலும் இவரின் கவிதைகள் political சிந்தை உடையனவாம் .



Tuesday, August 25, 2015

பில்கேட்ஸ் பற்றி நீங்கள் அறிந்திறாத தகவல்கள்

உலகத்தில் பிரமலமான பணக்காரர் என்றால் நாம் பில்கேட்ஸ் என்போம் இவரை பற்றி நாம் அறியாத சில விஷயங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள் 
  • வாஷிங்க்டன் ஸீட்டில் இல் பில்கேட்ஸ்  Oct. 28, 1955 அன்று பெற்றோரில் ஒருவர்  வழக்கறிஞர் ஆகவும் இன்னொருவோர் ஆசிரியர் ஆகவும் இருந்த தம்பதிக்கு பிறந்தார் .இவர் ஒரு நன்றாய் வழக்காடும் சிறுவனாகவும் அறிவுள்ள பிள்ளையாகவும் இருந்தாராம் ,மேலும் இவர் அதிகமாய் அறிவை பெருக்கி கொள்ளும் வாஞ்சை உடையவராய் இருந்தாராம் . தனது இளம் பிராயத்தில் உலக என்சய்களோ பீடியாவின் பாகங்கள் முதலில் இருந்து கடைசி வரையிலும் அத்தனை பாகங்களையும் படித்து முடித்து விட்டாராம்  , புத்தகங்கள் படிப்பது இவருக்கு பிரியம் இப்போதும் இவர் வீட்டில் ஒரு பெரிய புத்தக லைப்ரரி உண்டு .
  • இவர் ஹர்ட்வர்ட் பல்கலைகழகத்தில் இருந்து பாதியில் படிப்பை முடித்திராமல் வெளியேறினார் இருப்பினும் அதே பல்கலைக்கழகம் 2007 இல்  இவருக்கு உயர்ந்த மரியாதைக்கு உரிய டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. மேலும் இவர் பட்டம் அழைப்பு விழாவிற்க்கு அங்கே சிறப்பு விருந்தினராய் அழைக்கபட்டு இருந்தார் அப்போது அவர் கூறியது " நான் ஒரு தவறான உதாரணம் அதுதான் பட்டம் அழைப்பு விழாவிற்கு அழைக்க பட்டு இருக்கிறேன் ஒருவேளை நான் கல்லூரி படிப்பின் ஆரம்ப விழாவிற்க்கு அழைக்கபட்டு  இருந்தால் அப்போது நான் பேசி இருந்தால் இங்கே பட்டம் வாங்க மிக குறைவானவர்களே இருந்திருப்பீர்கள் " என்று கூறினாராம் .
  • எத்தனையோ எதிர்ப்புகள் சோர்வுகள் போரட்டங்கள் இத்தனையையும் தாண்டி 1985 இல் mircosoft வெளியிட பட்டது 1986 இல் சந்தைக்கு வந்தது 1987 இல் 31 வயதான இவர் பணக்காரரும்  பில்லியனர்ரும்  ஆனார் 
  • சிறு வயதில் ஒருமுறை லைசென்ஸ் இன்றி கார் ஒட்டி ,தப்பி ஓட முயன்றதற்க்காய் கைது செய்யப்பட்டு இருக்கிறார் .
  • ஒருவேளை microsoft முயற்சி தோற்று இருந்தால் இவர் artificial intelligence researcher ஆகி இருப்பாராம் அதில் அவருக்கு ஆர்வம் உள்ளதாம் டென்னிஸ் விளையாடுவது அவருக்கு பிடித்தமான ஹாபி , மேலும் கார்கள் ஓட்டுவது அவருக்கு பிரியம் அவரது வீட்டில் ஏறக்குறைய 23 கார்கள் நிறுத்தும் அளவுக்கு பெரிய கரேஜ் உண்டு 

  • Warren Buffet வாரேன் பப்பெட் (இவரும் உலகின் பிரபலமான கோடிஸ்வரர் ) இவரும் பில்கேட்ஸ்ம் நல்ல நண்பர்கள் 1990's  ஆண்டுகளில் இவர் தனது மனைவியை (மெலிண்டாவை )மனம் முடிக்க ப்ரொபோஸ் செய்ய நினைத்த பொழுது வாரேன் பப்பெட் தான் அதற்கான மோதிரத்தை தேர்வு செய்து கொடுத்தாராம் . ஆரம்பத்தில் மெலிண்டா mircosoft நிறுவனத்தில் பணிபுரிந்தவர் . இவர்களுக்கு தற்பொழுது 3 பிள்ளைகள் உள்ளனர் 
  • மேலும் இவருடைய பிள்ளைகளில் ஒவ்வொருவருக்கும் 10 மில்லியன் தான் சொத்துக்கள் கொடுப்பாராம் ,ஏராளமான பில்லியன் கணக்கில் வைத்திருக்கும் இவர் அதில் ஒரு சதவிகிதம் கூட இல்லை . பில்கேட்ஸ் தனது பிள்ளைகளுக்கு நிறைய பணத்தை ஒரு தகப்பனாய் கொடுப்பது என்பது அவர்களுக்கு நன்மையானது  அல்ல என்றும் கூறி இருக்கிறார் . மேலும் தனது பிள்ளைகளுக்கு எலெக்ட்ரிக் பிளான்ட்ஸ்க்கு கூட்டி சென்று நேரில் நிறைய விஷயம் கற்றுதருவாராம் அது அவர்களுக்கும் விருப்பமாம் . 
நிறைய சம்பாதித்தாலும் நிறைய சொத்துக்கள் சேர்த்தாலும் இவர் உலகம் எங்கும் நிறைய சேவைகள் செய்து வருகிறார் , ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் மூலம் பலருக்கு உணவளித்து உதவிகள் செய்து வருகிறார் அவரின் foundation மூலமாய் . என்பது உண்மையில் பாராட்டவேண்டிய விஷயம் . 

Monday, August 24, 2015

சீனாவின் பாரம்பரிய விளையாட்டு " கிரிகெட் பூச்சிகளின் சண்டை "

சீனாவில் வளர்க்கப்படும் செல்லமான பூச்சி கிரிகெட் பற்றி தெரியுமா ? 

1000 ஆண்டுகளாய் பாரம்பரியமாய் சீனாவில் வளர்ப்பு பிராணி உண்டு அது என்னன்னு தெரியுமா? கிரிக்கெட் பூச்சி,அங்கே  கிரிகெட் பூச்சிகள் சீனாவில் சிறுவர்களின் செல்ல பிராணிகளாம்  . இதை வைத்து நம்ம ஊரு சேவல் சண்டையை போல வீர விளையாட்டு கிரிகெட் fighting நடத்துவார்களாம் அதுவும் தேசிய அளவில் சிறந்த பூச்சிகள் தேர்வு செய்ய பட்டு இதற்கான ஜட்ஜ் -களால் அதன் இடை எல்லாம் கணக்கிட பட்டு களத்தில் இறக்கி விடப்படும் மேலும் இதன் மீது பந்தைய பணம் கூட வெற்றி பெற ஒரு பூச்சியின் மீது கட்டுவாங்கலாம் .இது ஒரு பாரம்பரிய பூச்சி சண்டை .
மேலும் கையில் ஒரு ஸ்ட்ரா எடுத்து அதன் மூலம் இந்த பூச்சிக்கு ட்ரைனிங் கொடுக்கறாங்க சண்டை போட களத்தில் நிறுத்தி ஒரு மெல்லிய குச்சியால் இவைகளை சண்டையை துவங்க சொல்லி சீண்ட ஆட்டம் ஆரம்பம் பின் ஜெயிக்கும் பூச்சி கோப்பையை வெல்கிறது . சரி இந்த பூச்சியை எங்கே வாங்குவாங்க ? வேறெங்கே சீனாவின் பீஜிங் மார்க்கெட் சந்தையில் தான் சிறு சிறு கூண்டுகளில் இவைகள் விற்பனை செய்ய படுகிறது  . கொஞ்சம் புதுமையா இருக்குல ??? பூச்சி எல்லாம் அவார்ட் வாங்குதுன்ன பாருங்களே .

சரி இதுக்கு ஏன் கிரிகெட் பூச்சின்னு தெரியுமா ? சீனர்கள் கிரிகெட் பூச்சிகள் ஒருபொழுதும் தோல்வியை ஒப்புகொள்ளாதுன்னும் உற்சாகத்தை விடாமல் முயற்சித்து போராடும் என்பதால் விடா முயற்சியின் அடையாளமாய் கிரிகெட் பூச்சிகளை  பாரம்பரிய விளையாட்டின் ஹீரோவாக வெச்சுருக்காங்க ...

கிரிகெட்  பூச்சி சம்பியன்ஸ் சுவாரஸியம் தான் .


பீனிக்ஸ் பறவை இருக்குதா ? இல்லையா ?

பீனிக்ஸ்-அக்கினி பறவை : The Bird of fire (mythology)
நிஜத்தில் இப்படி ஒரு பறவை உயிருடன் இருக்கிறதா ?அது நெருப்பில் போட்டாலும் மீண்டும் எழுந்து பறக்குமாமே அப்படியா ?சீன மக்களும் விரும்பும் ஒரு பறவையாம் ! எகிப்தில் சூரியனுக்கான கோவிலில் இது இன்னமும் வசிக்கிறதாம் , அப்போ அதற்க்கு மரணமே இல்லையா ??? எப்படி சாத்தியம் !!!
பதிலை படியுங்க நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் :) 


   பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உலகில் ஒரே ஒரு பறவை தங்க மயமான சிவப்பு நிறத்தில் ஜொலிஜொலிக்க கூடிய இறகுகள் உடையதாய் இருந்ததாம் அதன் வாலின் பகுதிகளில் பளுப்பும் நீளமும் ஆனா வண்ண மயமான நீளம் உள்ள இறகுகளும் உண்டாம் அது அரேபியாவில் வசித்ததாம் ,மிக மிக மிக  உயரமாய் தான் பறக்குமாம் அதினால் மனிதரில் எவரும் இதை காண முடியாதம் (இது உயர்வையும் ,வலிமையையும் ,வெற்றியையும் ) குறிக்கும் ஒரு பறவை என்றும் மக்களால் நம்ப பட்டதாம் ,இதன் வாழ்நாளில் ஒரு முறை கூட இதன் கால்கள் தரையில் பட்டதே கிடையாதாம் . 
கழுகுகளை காட்டிலும் பெரிதாயும் காணப்பட்டதாம் . அது முட்டை இடாதாம் மேலும் ஒரு பறவை 500 ஆண்டுகள் வரை வாழுமாம் .  "பீனிக்ஸ்" இது ஒரு பழங்கால நம்பிக்கை ஒரு கதை என்று கூறப்படுகிறது . இந்த பறவையின் அழகை கண்டு சூரியன் வியந்து  நீ என்னுடன் இரு ஜொலித்து கொண்டே இருப்பாய் என்றும் கூறினதாம் இதனால் இந்த பறவை சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி பறந்ததாம் அங்கு காடுகள் மேடுகள் பள்ளங்கள் தாண்டி ஒரு பாலைவனத்தில் இளைபாறின சில காலம் அங்கு தங்கிய பொழுதில் அது வயதான தனது நிலையை உணர்ந்ததாம் சூரியனை நோக்கி தன்னை மீண்டும்  இளமை ஆக்கிட வேண்டி அழகாய் பாடல் பாடியதாம் அதனிடம் இருந்து பதிலே வராமல் போகவே காத்திருந்து காத்திருந்து சோர்ந்து தான் முன் வசித்த இடத்திற்கே போகலாம் என்று திரும்பியதாம் வழியில் இலவங்க பட்டைகள் ,உயர்ந்த வாசனை திரவியத்தின் இலைகள் எல்லாத்தையும் சேகரித்து கொண்டுவந்து ஒரு உயர்ந்த பனை மரத்தில்இலவங்க பட்டைகளால் கூடு செய்து ,அதனை அந்த வாசனை மூலிகைகள் கொண்டு அலங்கரித்ததாம் பின் அதில் ஒரு நல்ல வாசனையுடைய ஒரு வகை  myrrh, என்னும் பிசினை சேகரித்து அதில் பந்து போல முட்டை வடிவில் உருவாக்கி அதன் மீது அமர்ந்து சூரியனை நோக்கி பாடல் பாட சூரியன் வெளிபட்டதாம்    கதிர் ஓளி இறகுகள் மீது பிரகாசித்த உடனே இந்த பறவையில் நெருப்பு பற்றிக்கொண்டதாம் தன்னை தானே இது எரித்து கொண்டதாம் , இது மாத்திரம் எரிந்து வெள்ளி நிற சாம்பல் நிறத்தில் சாம்பல்கள்  குவியலாய் இருக்க அடியில் இருந்த அது முன்னே பிசினால்  செய்து வைத்த  முட்டையில் இருந்து ஒரு சிறு பீனிக்ஸ் பறவை சிவப்பும் தங்கமயமும் ஆனா ஜொலிஜொலிக்கும் நிறத்துடன் சாம்பலில் இருந்து பறந்ததாம் அதுவும் 500 வருடங்கள் வாழும் என்றும் மீண்டும் இது போன்ற சுழற்சி நடக்கும் என்றும் கதைகள் உண்டு அதுதான் பீனிக்ஸ் நெருப்பு பறவை என்பார்கள்மேலும் இந்த பறவை உயிர்தேழுதலையும் மீண்டும் தன்னை நிலைப்படுத்தி முன்னிருந்த நிலைக்கு திரும்புவதையும் குறிக்கும் விதமாய் உள்ளதாம் மேலும் இந்த பறவைக்கு உலகில் உள்ள தேசங்களில் பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கபடுகிறது இந்த பறவையின் தன்மையையும் பெயரையும் கொண்டு ஆங்கிலத்தில் idiom கூட உண்டு "To  rise like a phoenix from the ashes" என்று மீண்டும் எழுவதை குறித்திடும் விதமாய் ஆயினும் நிஜத்தில் இது ஒரு கதையால் நம்பப்படும்  விஷயம் மாத்திரமே .